கல்யாணம் என்பது…..

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’
(Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு.
ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!
Tags: கணவன், கல்யாணம், காதல், திருமணம், துணைசிந்தித்துப் பாருங்கள்

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Tags: உறவு, கணவன், திருமணம், துணை, மனைவி, வாழ்க்கைஇல்லற வாழ்க்கை இனித்திட…

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. என்பது போன்ற பழமொழிகள் திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
திருமணம் என்பது பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படுவது. ஆனால் தற்போது காதல் திருமணங்களும் அதிகளவில் நடக்கின்றன. ஆனால் எந்த வகையான திருமணமாக இருந்தாலும், தம்பதிகள் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களது வாழ்க்கை நீடிக்கும்.
More »
அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவேக் கூடாது. நிதானமாக தங்களது நிலைகளை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தைப் பற்றித் தெளிவாக பேசி ஒருமித்தக் கருத்தை கொண்டு வர வேண்டும்.
திருமண வாழ்க்கை சிறக்க. . .!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் காரியங்களைத் தீர்மானிக்க வேண்டாம் என டாக்டர் டி. காமராஜ் கூறினார்.
விவாகரத்தைத் தடுப்பது, திருமண வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துவது ஆகியவை குறித்த இலவச கருத்தரங்கு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் டாக்டர் டி.காமராஜ் பேசியது:
திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது.
More »



