Browse > Home / தேடல் / தூரமதிகமில்லை..

| Subcribe via RSS

தூரமதிகமில்லை..

June 21st, 2008 Posted in தேடல்
தூரமதிகமில்லை..

தத்தித்தத்தி தண்டவாளத்தில்நடந்து
விக்கிவிக்கி விளாங்காய் கடிக்க…

காவல் குடிலில்
கவிஞனாய்…
அறிவிப்பாளனாய்…
பாடகனாய்…
அவதாரமெடுத்து
உரக்கக்கத்தி பண்டி வெருட்ட…

அம்மாவின் கைகள் பட்ட
கத்தரிக்காய்ப் புட்டையும்
கருவாட்டுக் குழம்பையும்
பலகைக் கட்டையிலிருந்து
பசியாற உண்ண…

கடும் இருட்டில்
காட்டுச்சுடலையும்-முனியப்பர் கோயிலும்
கடக்குமட்டும்
சைக்கிள் பெடலை இறுக்கி மிதித்து
கத்திக்கத்தி பாட்டுப்படித்து
பயமற்றவன் என்பதை பறைசாற்ற…

மண்ணுக்காய் வித்தான
மாவீரர் இல்லங்களில்
மலரடுக்கி அஞ்சலி செய்ய…

தூரமதிகமில்லை…

நாடின்றி நாதிலற்று
அன்னிய வீதிகளில் அலையும்
அவல வாழ்வு இனியும் வேண்டாம் …
அதோ பாருங்கள்…!

தமிழீழமெனும் தனிநாடு
பிரசவமாகிக் கொண்டிருக்கிறது…!!

மீண்டும்
எங்கள் மண்ணின் வீதிகளில்….
வயல் வரப்புகளில்….
ஆற்று மணலில்….
ஆடிப்பாடி மகிழ….

தூரமதிகமில்லை…

(ஆனையிறவு மீண்ட மகிழ்ச்சியில் இளைஞனொருவனின் நா உதிர்ந்தவற்றை அலங்காரமின்றி அப்படியே பதிவுசெய்திருக்கிறேன்)

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply