உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?
எல்லோருக்கும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு சில டிப்ஸ்:
* இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள்.
* ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு - இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசவும். தொடர்ந்து 2 வாரங்கள் இப்படி செய்து வந்தாலே போதும். முகம் பளபளக்க ஆரம்பித்து விடும்.







