Browse > Home / Archive by category 'கட்டுரைகள்'

| Subcribe via RSS

கனி ஜோதிடம் தெரியுமா..

February 28th, 2010 | No Comments | Posted in கட்டுரைகள்
கனி ஜோதிடம் தெரியுமா..

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.
 
கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!
More »

Tags: , ,

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.

August 9th, 2009 | 1 Comment | Posted in கட்டுரைகள்

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்..

என்று பெண் முடிக்கிறார்.

மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது, அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழுந்திடுமோ என்ற பயத்தில் முணுமுணுப்பை கைவிட்டதும் இப்போ மீண்டும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
More »

Tags: , ,

மைக்கேல் ஜாக்சன்

June 26th, 2009 | No Comments | Posted in கட்டுரைகள்
மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்… இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்!

‘கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.

மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத் தாண்டவமாடும் லாஸ் ஏஞ்செல்ஸ் இளைஞன்பெறும் அதே உணர்வே, லஸ் கார்னரில் டி.வி.டி.யில் ஜாக்சனைக் கண்டு ரசிக்கும் சென்னை இளைஞனுக்கும் ஏற்படும் என்பதே இவரது இசையின் ஈர்ப்புச் சகதி!

More »

படித்தது மறக்காமல் இருக்க…

February 2nd, 2009 | No Comments | Posted in கட்டுரைகள்

“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.

“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.

More »

Tags: , ,

மாதங்கள் பிறந்த கதை

November 12th, 2008 | No Comments | Posted in கட்டுரைகள்

ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அதற்கான பெயர் எப்படி வந்தது? என்பதை பின்வருமாறு காணலாம்.

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

More »

உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்…

October 19th, 2008 | 1 Comment | Posted in கட்டுரைகள்

ஒருசின்ன கற்பனை.

நீங்கள் ஒரு நிறுவனத்தைத் துவக்குகிறீர்கள். ஆறாயிரம் ரூபாய்தான் முதலீடு. ஒரு வருடத்தில் நிறுவனம் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. அப்போது ஊரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர் உங்களை அழைக்கிறார். `உங்கள் நிறுவனம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் தருகிறேன், எனக்கு கொடுத்துவிடுங்கள்’ என்கிறார். என்ன செய்வீர்கள்?

இதே நிலைதான் சபீர் பாட்டியாவுக்கும், ஆனால் கொஞ்சம் பிரம்மாண்டமாய். அவரை அழைத்து விலை பேசியவர், உலகின் முதல் கோடீஸ்வரர் பில்கேட்ஸ். சொன்ன தொகை எண்ணூறு கோடி ரூபாய். அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கம்பெனியை கொடுத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை. சபீர் பாட்டியா அப்படிச் செய்யவில்லை. பில்கேட்ஸிடம் பேரம் பேசினார். சில மாதங்கள் நடந்த பேரத்துக்குப்பிறகு நிறுவனம் கைமாறியது. தொகை எவ்வளவு தெரியுமா? இரண்டாயிரம் கோடி ரூபாய்.

More »