Browse > Home / Archive by category 'சினிமா..சினிமா...'

| Subcribe via RSS

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

More »

6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!

பூஜா கிரியேஷன்ஸ் சார்பில் சி.நாகராஜன் தயாரிக்கும் படம் நாள் நட்சத்திரம். புதுமுகங்கள் சஞ்ஜெய்.எஸ்., கிருஷ்ணாஸ்ரீ ஜோடி. சக்தி சி.என்.ஆர். இயக்கம். ராஜ்பவன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

மனோரமா வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றார். பிறகு மனோரமா பேசியதாவது:

கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால் ஹீரோக்கள் ரூ.7 கோடி, 8 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை எப்படி கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

More »

நான் கடவுள் - விமர்சனம்

February 13th, 2009 | No Comments | Posted in சினிமா..சினிமா...

பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் ‘ருத்ர தாண்டவம்’!

‘அஹம் பிரம்மாஸ்மி’ - அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற ‘அகோரி’யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார் முரட்டு ஆர்யா. அதே ஊரில் இருக்கிறது, உடல் சிதைந்த மனிதர்களையும் ஊனப்படுத்தப்பட்டவர்களையும் பிச்சை எடுக்கவைக்கிற தாண்டவனின் ‘ஊனமுற்றவர்கள் தொழிற்சாலை.’ அதில் சிக்கிக்கொள்கிறார் பார்வையற்ற பூஜா. இரக்கமற்ற அரக்கர்களிடம் சிக்கிச் சிதையும் பூஜாவுக்கு ஆர்யா அளிக்கும் மோட்சம் என்ன என்பதே கடவுள் கதை!

More »

Tags:

இயக்குனர்களால் தள்ளாடும் தமிழ் சினிமா

November 23rd, 2008 | No Comments | Posted in சினிமா..சினிமா...

முன்னூறு நாட்களுக்கு மேல் ஷ¨ட்டிங் நடத்தி பணம், உழைப்பு, நேரத்தை இயக்குனர்கள் வீணடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பல நல்ல படைப்புகள் வரத் தொடங்கியது இயக்குனர்கள் பீம்சிங், ஸ்ரீதர் காலத்தில்தான். அத்தகைய இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்ட பின்தான் ஷ¨ட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வார்கள்.

ஓரிரு மாதங்களில் அதவாது 50 நாட்களுக்குள் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை 14 நாட்களிலேயே இயக்கி முடித்தவர்தான் ஸ்ரீதர்.

More »

வெளிநாட்டு படங்களை உல்டா பண்ணும் கோலிவுட்!

September 25th, 2008 | No Comments | Posted in சினிமா..சினிமா...

வெளிநாட்டு படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.
 
More »

தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா

நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா?

அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள். கீழே உள்ள ஃபார்மூலாக்களை கவனமாக படியுங்கள். தொடர்ந்து படங்களை பாருங்கள். தமிழ் சினிமாவின் சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். தனது காதலிக்காகவோ அல்லது வில்லனை பழிவாங்கவோ கடின உழைப்பார். ஒரே பாடலில் மிக உயர்ந்த அந்தஸ்துக்கு வந்துவிடுவார்.

More »